அக்டோபர்,19 தூத்துக்குடி நடு கூட்டுடங்ங்காடு பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் மகன் வெள்ளத்துரை(49). லாரி டிரைவர். இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் மற்றொரு டிரைவரான மகாராஜன் என்பவரின் லாரி பின்னால் வருவதற்கு சிக்னல்செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரி மோதியதில் வெள்ளத்துரை படுகாயமடைந்தார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக