அக். 19- தூத்துக்குடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்த அனல்மின் நிலைய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி தெர்மல் நகர், கேம்ப் 2, டைப் 1 பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முருகேசன் (58), இவர் அனல்மின் நிலையத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கும் இருந்துள்ளது. இன்னறையில் அவரது மகன் தங்க சேகர் அவரைப் பார்க்க வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது முருகேசன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் தகவலின் பேரில் தெர்மல் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கா தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்தததால் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக