ஆற்காடு அருகே இருசக்கர வாகன சாலை விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம் !
ஆற்காடு , அக் 31 -
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சேட்டு இவரின் மகன் பிரகாஷ் (வயது 23) என்பவர் இன்று காலை திமிரியில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அவருடன் அதே ஊரைச் சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 59) மற்றும் பிரவீன் (வயது 13) ஆகியோ ரும் பயணித்தனர். மகாலட்சுமி கல்லூரி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த டாடா ஏசி வாகனம் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.இந்த விபத்தில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் ஆற்காடு அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த கோவிந்தம்மாள் மற்றும் பிரவீன் இருவரும் ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக