திருப்பத்தூர் நகரப் பகுதியில் உள்ள காலை உணவு திட்டம் திடீரென ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்!
திருப்பத்தூர் , அக் 22 -
திருப்பத்தூர் நகராட்சி பகுதிக்கு சேர்ந்த ஒன்றாவது முதல் ஐந்தாவது வாய்ப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகின்ற நிலை யில் திடீரென திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஆய்வு மேற் கொண்டார் பின்பு உணவு சரியான முறையில் செய்யப்படுகின்றதா என ஆய்வு செய்து உணவு சாப்பிட்ட திருப்பத் தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி
பள்ளி மாணவர்களுக்கு குறித்த நேரத் தில் உணவு சென்றடைய வேண்டும் தரமான உணவு சென்றடைய வேண்டும்
தீபாவளி விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள அரசு பள்ளிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் உணவு, திருப்பத்தூர் பகுதியில் உள்ள சமையல் கூடத்தில் தயார் செய்யப்படு கிறது. இந்த நிலையில், அந்த உணவு தரமான முறையில் தயார் செய்யப்படு கிறதா என்று நல்லதம்பி எம்.எல்.ஏ. திடீரென ஆய்வு செய்தார். அப்போது, தரமான முறையில் உணவை தயாரித்து சரியான நேரத்தில் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சாந்தி, பொதுக்குழு உறுப்பினர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக