ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்ல 16வது ஆண்டு துவக்க விழா!
ஆற்காடு , நவ 3 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மகாத்மாகாந்தி இலவச முதியோர்
இல்லம் 16வது ஆண்டு துவக்க விழா முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு முதியோர் இல்லத்தின் தலைவர் ஜெ.லட்சுமணன் தலைமை தாங்கினார்.செயலாளர் ஜெ.சர்ஜன்ராஜ் ஜெயின் முன்னிலை வகித்தார் பொரு ளாளர் பி.என் பக்தவச்சலம் ஆண்டறிக் கை வாசித்தார். துணை தலைவர்
பெனஸ்பாண்டியன் அறக்கட்டளை பணிகள், செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்.இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக