நெருங்கி வரும் கிறிஸ்துமஸ்! தயாராகும் உலர் பழங்களால் 200 கிலோஅளவிலான லிக்வர் பிரம்மாண்ட கேக்!
திருப்பத்தூர் , நவ 10 -
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை அடுத்த பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள ஏஆர் தங்கக்கோட்டை தனியார் சொகுசு ஓட்டலில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு லிக்வர் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 17ம் நூற்றாண் டில் பிரிட்டன் நாட்டில் லிக்கர் கேக் அறிமுகம் ஆன நிலையில் இதனை பல்வேறு நாடுகளில் கடைப்பிடிப்பதா கவும் அதே போல் திருப்பத்தூர் மாவட் டத்தில் இரண்டாவது முறையாக உலர் பழங்கள் பயன்படுத்தி 200 கிலோ அளவிலான லிக்வர் கேக் தயாரிக்க திட்டமிட்டு ஒரு மாதத்திற்கு முன்னதாக வே ஊறல் போட வேண்டும் என்பதால் தங்கக்கோட்டை ஹோட்டலில் உலர் பழங்கள் மற்றும் ஆல்கஹால் கொண்டு லிக்வர் கேக் மிக்சிங் திருவிழா நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி கிரிவேலன், மற்றும் ஏலகிரி முக்கிய தொழில் அதிபர்கள் பண்டூரா பார்க் மற்றும் செல்பி பாண்ட மற்றும் தங்ககோட்டை ரெசார்ட் விருந்தினர்கள்,
பெண்கள், குழந்தைகள், வாடிக்கையாளர் கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து ஹோட்டல் பொது மேலாளர் சசிகுமார் கூறுகையில்
லிக்கர் கேக் மிக்சிங் சேர்மனி பல்வேறு இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மக்களும் இதனை அறிந்து கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடு செய்துள்ளோம் ஒரு மாத காலம் ஊறல் போட்டு அதில் கேக் செய்து அதனை ஓட்டல் ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அதேபோன்று ஏழை எளிய மக்களுக்கும் வழங்கப்படும் மேலும்முதல் முறையாக 100 கிலோ கேக் செய்தோம்
இரண்டாவது முறையாக தற்போது 200 கிலோ செய்துள்ளோம் அடுத்த வருடம் 500 கிலோ அளவிலான கேக் செய்ய திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்
மேலும் இதன் அனைத்து ஏற்பாடுகளை யும் தலைமை சமையல் நிபுணர் கோபாலகிருஷ்ணன் செய்தார் எனவும் தெரிவித்தார்
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக