தூத்துக்குடியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் 2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 நவம்பர், 2025

தூத்துக்குடியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் 2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.

தூத்துக்குடியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் 2 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 2 நபர்கள் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு - இந்த ஆண்டு இதுவரை 126 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 18.10.2025 அன்று தாளமுத்துநகர் பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் மகன் பிரகாஷ் (21) என்பவரையும், அதேபோன்று கடந்த 14.10.2025 அன்று ஆறுமுகநேரி பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறுமுகநேரி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி மகன் இசக்கிமுத்து (26) ஆகிய 2 நபர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (18.11.2025) சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை 126 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad