கடந்த 09.10.2025 அன்று புதுக்கோட்டை பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களான மேலவாகைகுளம் பகுதியைச் சேர்ந்த தர்மாகுட்டி மகன் ஆறுமுகநைனார் (23), ஸ்ரீவைகுண்டம் கால்வாய் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சுடலைகண்ணு (24) மற்றும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி(23) ஆகிய 3 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் இன்று (07.11.2025) புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை 119 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக