கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள பேயன்குழியை சேர்ந்தவர் மணிகண்டன் (46). டிரைவர். இவர் நேற்று மதியம் அங்குள்ள ஒரு விசேஷ நிகழ்ச்சியில் உறவினர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீர் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார். உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக