இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் பகுதியில் வயலில் மேய்ந்து கொண்டுஇருந்த 5 ஆடுகளை சொகுசு காரில் வந்த மதுரை மாவட்டதை சேர்ந்த காளீஸ்வரன், முத்துமாரி தம்பதியினர்.
தனது காரில் கடத்தி மதுரைக்கு கொண்டு சென்று உள்ளனர்.இவர்களின் காரை மானாமதுரை அருகே போலீசார் விரட்டி பிடித்தனர். அவர்களின் காரில் 5ஆடுகள் மற்றும் வெவ்வேறு பதிவு எண் நம்பர் பிளேட் இருந்தன இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது போன்று சொகுசு காரில் வெவ்வேறு நம்பர் பிளேட் பொருத்தி பல இடங்களில் ஆடுகள் கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளதாக தெரியவருகிறது.
மாவட்ட செய்தியாளர்,
செந்தில்குமார்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக