நவ,29. தமிழகத்தில் டித்வா புயல் காரணமாக பல மாவட்டங்களுக்கு 29.11.2025 மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், டித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் இருந்து திருச்சி, தூத்துக்குடி மற்றும் மதுரைக்கு செல்லக்கூடியஅனைத்து விமானங்களும் இன்று (சனிக்கிழமை) காலை முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற டித்வா' புயல் எதிரொலியாக, புதுச்சேரியிலும் இன்று விமான சேவை ரத்து செய்யப்படுகிறது.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக