வாக்காளர் சிறப்பு திருத்த பணி மும் முரம்! நேரில் சென்ற ராணிப்பேட்டை கலெக்டர் உடன் தாசில்தார்!
ராணிப்பேட்டை ,நவ 5 -
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி படிவங்களை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வீடு வீடாக சென்று வழங்கி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வாக் காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நேற்று முதல் முழுவீச்சில் தொடங் குகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர் கள் வீடு வீடாக வந்து கணக்கெடுப்புக் கான படிவங்களை வழங்க உள்ளனர்.
அதில் வாக்காளர் பட்டியலில் தகுதியான வர்கள் அனைவரையும் விடுபடாமல் சேர்ப்பது, உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்டவர்களின் பெயர்களை கண்ட றிந்து நீக்குவது ஆகிய சிறப்பு தீவிர திருத்தப்பணி பணிகள் இன்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை மற்றும் அம்மூர் ஆகிய பகுதிகளில் வாக்காளர் சிறப்பு திருத்தப்பணி படிவங்களை மாவட்ட ஆட்சியர் முனைவர் சந்திரகலா வீடு வீடாக சென்று வழங்கி ஆய்வு மேற்கொண்டார்.இந்த நிகழ்வில் வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் நகராட்சி ஆணையாளர் இளையராணி நகர மன்ற தலைவர் ஹரிணிதில்லை மற்றும் கவுன்சிலர் சுரேஷ், அரசு அதிகாரிகள் தேர்தல் அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக