விருதம்பட்டு காவல் நிலையத்தில் சுனில் (எ) வினோத்குமார் கொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு !
காட்பாடி , நவ 29 -
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, விருதம்பட்டு காவல் நிலையத்தில் 2020 இல் பதிவு செய்யப்பட்ட சுனில் என்கின்ற வினோத்குமாரின் கொலை வழக்கில், 28.11.2025 வேலூர் சத்துவாச்சாரி நீதி மன்றம், மணிகண்டன் சதீஷ்குமார் கோகிலா ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.காட்பாடி, விருதம்பட்டு காவல் நிலையத்தில் கொலை செய்யப் பட்ட குற்ற வழக்கில் தொடர்புடைய எதிரிகளுக்கு ஆயுள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக. வேலூர் மாவட்டத்தில் நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில் வாகனன் , காட்பாடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பழனி, காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் புகழ் மற்றும் மாவட்ட காவல் துறைனரின் பார்வையில், கடந்த 2020 ஆம் ஆண்டு விருதம்பட்டு காவல் நிலையத்தில் சுனில் என்கின்ற வினோத்குமார் என்பவரை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டடு கைது செய்யப்பட்ட எதிரிகள் 1) மணிகண்டன் (வயது 33) த/பெ மாரிமுத்து, திருவாரூர், 2) சதீஷ்குமார் (வயது 32) த/பெ. சேகர் காங்கேயநல்லூர் மற்றும் 3) கோகிலா, (வயது 40) க/பெ. இப்ராஹிம், காங்கேயநல்லூர் காட்பாடி என்பவர்களுக்கு வேலூர் சத்துவாச்சாரி நீதிமன்றத்தில் 28.11.2025 ஆம் தேதி ADJ-1 நீதிமன்றம், மூவருக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய்.5,000/- அபராத மும், அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 03 மாதம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக