தூத்துக்குடி கடற்கரை சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 நவம்பர், 2025

தூத்துக்குடி கடற்கரை சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்து.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா அருகே நள்ளிரவில் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் ஒரு துயர விபத்து ஏற்பட்டது. 

இந்த சம்பவத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

சரூபன் (கோவை), ராகுல் செபாஸ்டியன் (புதுக்கோட்டை), முகிலன் (திருப்பத்தூர்), ஆகியோர் நான்காம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் இவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

மேலும் கிருத்திகுமார் (தூத்துக்குடி), சரண் (திருப்பத்தூர்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து டவுன் ஏஎஸ்பி மதன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad