டெல்லி குண்டு வெடிப்பு குறித்து பொன் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சி மீது அவதூறு: கடும் கண்டனத்தை தெரிவித்த விஜய்வசந்த் எம்.பி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 நவம்பர், 2025

டெல்லி குண்டு வெடிப்பு குறித்து பொன் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சி மீது அவதூறு: கடும் கண்டனத்தை தெரிவித்த விஜய்வசந்த் எம்.பி.

டெல்லி குண்டு வெடிப்பு குறித்து பொன் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சி மீது அவதூறு: கடும் கண்டனத்தை தெரிவித்த விஜய்வசந்த் எம்.பி 

டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்பை காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர் கட்சி தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை தொடர்புபடுத்தி முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வழங்கிய வெறுப்பூட்டும் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மிகக் கடுமையாக கண்டிக்கிறேன்.

பொன். ராதாகிருஷ்ணன் போன்ற முன்னாள் மத்திய அமைச்சர்  பதவியில் இருந்த ஒருவர், அரசியல் நலனுக்காக இவ்வளவு கீழ்மட்ட பொய்களை பரப்புவது வெட்ககரமானது மற்றும் நாட்டின் பாதுகாப்பை துஷ்பிரயோகம் செய்யும் ஒரு ஆபத்தான செயல் ஆகும்.

டெல்லியில் நடைபெற்றது ஒரு சோகமான நிகழ்வு. இந்திய நாட்டினர் அனைவரும் ஓட்டு மொத்தமாக ஒருமித்து நின்று இதை கண்டித்து, மறைந்தவர்கள் மற்றும் காயம் காயம் அடைந்தவர்கள் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்கும் இந்த வேளையில் பொன். ராதாகிருஷ்ணன் போன்றவர்களின் விஷ வார்த்தைகள் அவர்கள் காயத்தை இன்னும் ஆழப்படுத்தும். அரசியல் ஆதாயத்திற்காக பாஜக நடத்திய நாடகங்களை இந்த நாடு மறக்கவில்லை.


தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad