ஸ்ரீவைகுண்டம் 5. நவதிருப்பதிகளில் 4 வது திருப்தியான தொலைவில்லி மங்கலம் அரவிந்த லோச்சனர் கோவிலில் ஐப்பசி பிரம்மோற்சவம் நேற்று துவங்கியது.
நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 8 மணிக்கு திருமஞ்சனம். நித்தியல் கோஷ்டி. 9.30 மணிக்கு உற்சவர் செந்தாமரை கண்ணன் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் கருட மண்டபம் எழுந்தருளினார். 10.30 மணிக்கு கொடி பட்டம் மாடவீதி சுற்றி வந்தது. 11.15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
மாலை 4.30 மணிக்கு சாயரட்சை. 5.30 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் புறப்பாடு நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் சுந்தர்ராஜன். கீழத்திருமாளிகை ராமானுஜம் ஸ்வாமிகள். ஸ்தலத்தார்கள் சந்தானம். வாசு. அறங்காவலர் குழுத் தலைவர் ராமானுஜம் என்ற கணேசன் உறுப்பினர்கள் கிரிதரன். ராமலட்சுமி. காளிமுத்து. செந்தில். நிர்வாக அதிகாரி சதீஷ். ஆய்வாளர் நம்பி. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி. டி.வி.எஸ் கள ஆய்வாளர் பாபு.கள ஆலோசகர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினசரி மாலை 5 மணிக்கு சிம்ம வாகனம். அனுமார் வாகனம். சேஷ வாகனம் ஆகிய வாகனங்களில் வீதியுலா வருகிறார். நவம்பர் 8 ந்தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு கருட சேவை நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக