குடியாத்தம் ஒன்றியம் பாக்கம் ஊராட்சி யில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா!
குடியாத்தம் ,செப் 8
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாக்கம்
ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2020-2021 செல்வ பெருமாள் நகரில் புதிய அங்கன் வாடி கட்டிடம் சுமார்10 லட்சத்து90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம் ரிஹாயானா தலைமை தாங்கினார்
ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி மணவாளன் வரவேற்புரை ஆற்றினார்
இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எண்.இ. சத்யானந்தம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப் புகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில்
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய குழு உறுப்பி னர் சுரேஷ்குமார் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ஹேமலதா சரவணன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசுமதி விஜய ராஜ் அங்கன்வாடி . மேற்பார்வையாளர் கமலா ஊராட்சி செயலாளர் ராஜா மற்றும் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியில் அங்கன்வாடி பணியாளர் தீபா நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக