அரசாணை எண்.306க்கு எதிராக செயல் படும் தமிழ்நாடு மாநிலக்கணக்காயர் நடவடிக்கையை கண்டித்து உண்ணா விரதப் போராட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

அரசாணை எண்.306க்கு எதிராக செயல் படும் தமிழ்நாடு மாநிலக்கணக்காயர் நடவடிக்கையை கண்டித்து உண்ணா விரதப் போராட்டம் !

அரசாணை எண்.306க்கு எதிராக செயல் படும் தமிழ்நாடு மாநிலக்கணக்காயர் நடவடிக்கையை கண்டித்து  உண்ணா விரதப் போராட்டம் !
வேலூர் , டிச 21 -

வேலூர் மாவட்டம் தமிழ் நாடு மேல் நிலைப்பள்ளி முதுகலை வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் சார் பாக தமிழ்நாடு மாநிலக்கணக்காயர் அலு வலகம் தர ஊதியத்தினை அரசாணை எண்.306க்கு எதிராக ரூபாய் 5400 லிருந்து ரூபாய் 4800ஆக குறைக்கும் நடவடிக்கை யை கண்டித்து 20.12.2025 அன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடி யம் அருகில் மாநிலத்தலைவர் எம்.ராஜா ராம் தலைமையில் ஒரு நாள் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது.  மாநில பொதுச்செயலாளர் வி.கிருண்ணன், ஒருங்கிளைப்பாளர் ஆர்.நெடுஞ் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் முன்னாள் பொதுச்செயலாளர் எஸ்.தட்சி ணாமூர்த்தி, முன்னாள் மாநில பொரு ளாளர் ஒருங்கிணைப்பாளர், நிறுவனர் த.பாலு, அமைபுச்செயலாளர் சோ.சம்பத் எம்.பாண்டுரங்கன், எம்.எஸ்.சங்கர பாண்டியன், கே.சந்தானகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், எம்.ஞானசம்பந் தம், வி.லோகநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முதுகலை வணிகவியல் தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜி.செல் வராஜ், மாநில பொருளாளர் டி.இருதய ராஜ், தலைமை நிலைய செயலாளர் டி.தாகப்பிள்ளை எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். 
கோரிக்கைகள் ;
1. தமிழ்நாடு அரசின் அராசணை 306-க்கு எதிராக 01.01.2006முதல் கருத்தியலாக வும் 01.04.2013முதல் பணப்பலனுடன் பெற்ற வந்ததை 12ஆண்டுகள் கழித்து ஒய்வு பெறும் தொழிற்கல்வி ஆசிரி களக்கு தமிழ்நாடு மாநில கணக்காயர் தரஊதியம் ரூ.4800 என குறைத்ததை திரும்பப் பெற வேண்டும்.  
2.அரசாணை எண்.306 நிதித்துறை நாள் 12.09.2018-ஐ நிலை நிறுத்திடும் வகையில் 01.01.2006க்கு முன்னர் தேர்வு நிலை பெற்ற மேல் நிலைத்தொழிற் கல்வி ஆசிரியர்கள் அனைவருக்கும் நிர்ணயம் செய்யப்பட்டு பெற்று வருகின்ற தர உதியம் ரூ.5400ஐ தொடர்ந்து பெற்றும் வகையில் உதிய பதிலுரையை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு நிதி உதியப்பிரிவு துறை மிக விரைவில் அனப்பி வைத்திட வேண்டும்.
3.தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் வகையில் சென்னை மற்றும் மதுரை கிளை உயர்நீதி மன்ற தீர்பினை எற்றும் 01.04.2003க்கு முன்னர் பணிவரன்முறை செய்யப்பட்டு விடு பட்டுள்ள அனைத்து தொழிற்கல்வி ஆசிரியர்களின் பகுதிநேர பணிக் காலத்தில் 50 சதவிகித பணிக்காலத்தி னை ஒய்வூதியப் பலன்களுக்கு எடுத்துக்கொள்ள உரிய அரசாணைகள் வெளியிட வேண்டும்  25 பெண் ஆசிரியை கள் உள்பட 150க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்ற னர்.  காலை 10 மணிக்கு தொடங்கி உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.  முடிவில் மாநில பொருளாளர் டி.இருதயராஜ் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad