கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு செய்யும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம், இன்று 16 12 2025 காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் குறள் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின், உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களின் நடமாட்டம் குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்தார்.
தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்களை கைது செய்து, அவர்களை சீர்திருத்தச் சிறைகளுக்கு அனுப்பி தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கவும் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக வழக்குகள் பதிவு செய்து, உண்மையான குற்றவாளிகளை கைது செய்து மேல்நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துகளைத் தடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
சாலைகளில் தேவையான இடங்களில் மின்னும் ஒட்டுவில்லைகள், வேகத்தடைகள், பாதச்சாரிகள் நடைபாதை கோடுகள், எச்சரிக்கை பலகைகள் உள்ளிட்டவை அமைக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சாலைகளில் ஏற்பட்டுள்ள பழுதுகளை உடனடியாக சரிசெய்யவும் உத்தரவிடப்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைகவசம் அணிவதையும், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதையும் போக்குவரத்து காவலர்கள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் பிரதிபலிப்பான்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது. சுகிதா, துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆணையாளர்கள், வட்டாட்சியர்கள், துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக