பொது விநியோகம் திட்டக் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் நியமனம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

பொது விநியோகம் திட்டக் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் நியமனம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பொது விநியோகம் திட்டக் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் நியமனம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
 வேலூர் , டிச 15 -

வேலூர் மாவட்டம் , குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தை சேர்ந்தவர் லாவண்யா தினேஷ் , குடியேற்றம் பாரதி தமிழ் தொண்டு அறக்கட்டளையின் இயக்குனராக உள்ளார்.இவருக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பதவி வழங்கப்பட்டது.மேலும் வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறையின் வெளிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக உள்ளார்.இந்நிலையில் இவரை வேலூர் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை யின் பொது விநியோகத் திட்டத்தின் கண்காணிப்பு குழு உறுப்பினராக வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி நியமித்துள்ளார்.இவை வேலூர் மாவட்டத் தின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வு பாதுகாப்பு துறை மூலம் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் செயல்பாடு களை மேம்படுத்தவும் பொது சேவையில் உள்ள குறைபாடுகளை களையவும் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் சீரான அளவில் விநியோகம் நடைபெறுவதை கண்காணிக்கவும் நியாய விலை கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மீது வரக்கூடிய புகார்  விசாரணை செய்யவும் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013 மத்திய சட்டம் 2013 மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு விதிகள் 2017 விதி எண் 8 (1) (இ) கீழ் மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தக் குழுவில் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி தலைவராகவும் , உறுப்பினர்களாக வேலூர் எம்பி கதிர் ஆனந்த் , வேலூர் வருவாய் கோட்ட அலுவலர் , ஊராட்சி துறையின் உதவி இயக்குனர் , வேலூர் குடிமை பொருள் புலனாய்வு துறை ஆய்வாளர் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் , கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் , வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் , வேலூர் அலமேலுரங்காபுரம் பகுதியை சேர்ந்த திருவருள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அறக்கட்டளையின் தலைவர் விஜயலட்சுமி  , வேலூர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் குமரேஸ்வரன் , குடியாத்தம் காந்திநகர் பகுதியை சேர்ந்த தமிழக மாற்றுத்தி றனாளிகள் உரிமை மீட்பு சங்கம் மற்றும் தமிழ் மாநில அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் நல வாழ்வு மத்திய பொது சங்கம் தலைவர் செந்தில்குமார்  வேலூர் மகளிர் வழக்கறிஞர் சங்க நிர்வாகி வழக்கறிஞர் நித்தியதேவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி.ராஜேந்திரன்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad