பாபர் மசூதி இடிப்பு தினத்தில் திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியின் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 டிசம்பர், 2025

பாபர் மசூதி இடிப்பு தினத்தில் திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியின் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம்



டிசம்பர்_6  பாசிச எதிர்ப்பு தினம் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு 33 ஆண்டுகால அநீதி  வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம்  என்ற முழக்கத்தோடு 

SDPIகட்சி 

திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக ரயில் நிலையம் முன்பு (குமரன் சிலை)  மாபெரும் மக்கள்

 திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் அரசமைப்பு சட்டத்தின் முகவுரையை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் 

J.பஷீர்அஹமது

 தலைமையில்  06/12/2025 அன்று 

நடைபெற்றது.   

ஆர்ப்பாட்டத்தின் துவக்கமான வரவேற்புரையை SDPI கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட பொது செயலாளர் A.அப்துல்வஹாப்  

அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.         

முன்னிலை :

SDPI கட்சிமாவட்ட தொகுதி கிளை நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சி தொழிற்சங்க தேசிய பொது செயலாளர் தஞ்சை முகமது ஃபாரூக் கலந்து கொண்டார்

கண்டன உரை:

SDTU தேசிய பொது செயலாளர்  

தஞ்சை A.முகம்மதுபாரூக் அவர்கள்  மற்றும் 

நவீன மனிதர்கள் 

அமைப்பு தலைவர்  

தோழர் பாரதி சுப்பராயன் அவர்கள் மற்றும் 

SDPI கட்சி திருப்பூர் 

தெற்கு மாவட்ட தலைவர் M.ஹாரிஸ்பாபு 

அவர்களும்  கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பட்டத்தின் இறுதியாக SDPI கட்சியின் திருப்பூர் 

தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர்  A_முஹம்மதுரபீக்  

அவர்கள் நன்றியுரை கூறினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி மற்றும் சார்பு அமைப்புக்கள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad