ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ என்ஜினியரிங் கல்லூரியில் புதிய பேருந்து இயக்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 டிசம்பர், 2025

ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ என்ஜினியரிங் கல்லூரியில் புதிய பேருந்து இயக்கம்.

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ என்ஜினியரிங் கல்லூரியில் புதிய பேருந்து பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு. 

இந்நிகழ்ச்சியில் சிஎஸ்ஐ தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல் நடத்தும் அலுவலரும், ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதியுமான ஜோதிமணி, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி சந்தோசம், கல்லூரி தாளாளரும், திருமண்டல மேலாளருமான காபிரியேல் தேவயிரக்கம் என்ற டாக்டர் தேவா காபிரியேல் ஜெபராஜன் ஆகியோர் கொடியசைத்து புதிய பேருந்தை தொடங்கி வைத்தனர். 

கல்லூரி முதல்வர் ஜெயக்குமார்,  போக்குவரத்து துறை நிர்வாகி ஜோஸ் சுந்தர், பேராசிரியர்கள், அலுவலர்கள், ஓட்டுநர்கள்  மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad