முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மற்றும் அரசுநலத்திட்ட உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ஆர்.காந்தி!
ராணிப்பேட்டை , டிச 6 -
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்து ள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக கூட்டரங்கில் இன்று (6.12.2025) அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் நினைவு தின நிகழ்வில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர் ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை
அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழா வில் 2582பயனாளிகளுக்கு ரூ.6.27 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவி களை வழங்கினார்கள்.
உடன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர்
ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.தனலிங்கம், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை ந.செ.சரண்யாதேவி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் செந்தில்குமரன், நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, ஒன்றிய குழு தலைவர்கள் புவனேஸ் வரிகள் சத்தியநாதன், கலைகுமார், வடிவேலு, அசோக், நகரமன்ற தலைவர் தேவிபென்ஸ் பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நல அலுவலர் அறிவுடைநம்பி மற்றும் பலர் உள்ளனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக