வேலூரில் நாளை ஜாக்டோ-ஜியோ பேரமைப்பினர் உரிமை மீட்பு உண்ணாவிரதம் அறிவிப்பு!
வேலூர், டிச 12 -
வேலூர் மாவட்டம் ஜாக்டோ- ஜியோ பேரமைப்பின் வேலூர் மாவட்டத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 2021 தேர்தல் கால வாக்குறு தியின்படி லட்சக்கணக்கான அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப்பணியளார் களின் வாழ்வாதார கோரிக்கைகளான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி நாளை 13.12.2025 ஒரு நாள் மாவட்ட தலைநகரில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆஞ்ச நேயர் கோவில் அருகில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ட்டி.டி.ஜோஷி, எம்.ஜெயகாந்தன், ஆ.ஜோசப் அன்னை யா, ஜி.சீனிவாசன், ஆகியோர் தலைமை யில் நடைபெறுகிறது. மாநில ஒருங்கி ணைப்பாளர்கள் தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் சி.சேகர், தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் கழக சோ.சுரேண் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை தொடக்கி வைக்கிறார் கள். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் கள் செ.நா.ஜனார்த்தனன், முகமது ஷாநவாஸ், ஜி.கோபி, அக்ரி.எ.இராமன், துரை.கருணாநிதி ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசுகின்றனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், மாவட்ட உயர்மட்டக் குழு நிர்வாகிகள் எம்.எஸ்.செல்வகுமார், வாரா, ஆர்.ஜெயக்குமார், ஜி.டி.பாபு, எம்.சினேகலதா, அல்போன்ஸ்கரி, கவியரசன், க.குணசேகரன், எம்.எஸ்.தீன தயாளன், வருவாய் துறை அலுவலர் சங்க ரமேஷ், பா.வேலு, வேந்தன், சுமதி, உள்ளிட்ட 56 வகையான ஆசிரியர் அரசு ஊழியர் பணியாளர் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் பேசுகின்றனர்.
கோரிக்கைகள்
1.பங்கேற்பு புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத் தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
2.ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பினைக் காரணம் காட்டி 23.08.2010க்கு முன்னதாகப் பணி யேற்ற ஆசிரிர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து டெட் தேர்விலி ருந்து விலக்களித்து ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் 3.காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்கிட கோருகின்றோம்.
4.இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் களுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். 5.முதுகலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறை களிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்த்தி ஓட்டுநர்கள், ஆகியோடருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்கள் நிலுவயிலுள்ள பணி மேம்பாடு உடனடி யாக வழங்கிட வேண்டும். மேலும் மேல்நிலைப்பள்ளிகிளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.
6.சிறப்பு காலமுறை ஊதியம் பெற்ற வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், ஆகியோருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரி யர்கள், மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
7.அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள 6 லட்சத்திற்கு மேற்பட்ட பணி இடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தனியார் வெளிமுகமை ஒப்பந்தம், தற்காலிகம், உள்ளிட்ட முறைகளை கைவிட்டு சமூக நீதி காத்திட நிரந்தர பணியிடங்களில் நிரப்பிட வேண்டும்.
8.21-மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள தை உடனடியாக வழங்கிட வேண்டும்
9.2003 முதல் 2005 வரை தொகுப்பூதியத் தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப் டுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
10.சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக