இரட்டை திருப்பதி தேவர் பிரான் கோவிலில் கருடசேவை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 டிசம்பர், 2025

இரட்டை திருப்பதி தேவர் பிரான் கோவிலில் கருடசேவை.

இரட்டை திருப்பதி தேவர் பிரான் கோவிலில் கருடசேவை.

ஸ்ரீவைகுண்டம் டிசம்பர் 18 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் 5 வது இரட்டை திருப்பதி தேவர் பிரான் கோவில். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் அஸ்தம் நட்சத்திரம் அன்று துவங்கி 11 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். 

அதனை முன்னிட்டு கடந்த 14 ந்தேதி கொடியேற்றம் நடந்தது. இன்று5 ந்திரு விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 8 மணிக்கு நித்தியல் திருமஞ்சனம். காலை புறப்பாடு. பின்னர் 11 மணிக்கு உற்வர் தேவர் பிரான் தாயார்களுடன் மண்டபம் எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. 

அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் கீழத்திருமாளிகை ராமானுஜன் ஸ்வாமி தலைமையில் பட்சி ராஜன் . திருவேங்கடாச்சாரி. சேஷகிரி . பட்சி ராஜன். ராமானுஜன் .சீனிவாசன் திருவேங்கடத்தான் . கண்ணன் . அஸ்வின். வரதராஜன் .மதுரகவி. ஆகியோர் சேவித்தனர். 

சாத்து முறை கோஷ்டி முடிந்து தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை. 5.30 மணிக்கு உற்சவர் தேவர் பிரான் மற்றும் தொலைவில்லி மங்கலம் செந்தாமரை கண்ணன் ஆகியோர் 6.15 மணிக்கு கருட வாகனத்தில் காட்சி தந்தார். பின் கோவில் பிரகாரத்தில் உலா வந்தனர். 

இந்நிகழ்ச்சியில் ஸ்தல அர்ச்சகர் ரகு. சுந்தர்ராஜன் .பாலாஜி.கண்ணன். ஸ்தலத்தார்கள் ஸ்ரீதர் .சந்தானம்.வாசு. நிர்வாக அதிகாரி சதீஷ். ஆய்வாளர் நம்பி. அறங்காவலர் குழு தலைவர் கணேசன் என்ற ராமானுஜன் உறுப்பினர்கள் ராமலட்சுமி. காளிமுத்து. செந்தில். கிரிதரன். கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி டி வி எஸ் கள ஆய்வாளர் பாபு உட்பட கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad