தமிழ்நாடுவிஸ்வகர்ம நண்பர்கள் நலச் சங்க முப்பெரும் விழா விஸ்வகர்ம ஜெகத்குரு சிவராஜ சுவாமிகள், ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன் பாராட்டு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 டிசம்பர், 2025

தமிழ்நாடுவிஸ்வகர்ம நண்பர்கள் நலச் சங்க முப்பெரும் விழா விஸ்வகர்ம ஜெகத்குரு சிவராஜ சுவாமிகள், ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன் பாராட்டு !

தமிழ்நாடுவிஸ்வகர்ம நண்பர்கள் நலச் சங்க  முப்பெரும் விழா  விஸ்வகர்ம ஜெகத்குரு சிவராஜ சுவாமிகள், ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரன் பாராட்டு !
 வேலூர் , டிச 28 -

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நலச்சங்கத்தின் 25ஆம் ஆண்டு தொடக்கம் வெள்ளி விழா,  மாதாந்திர நாட்காட்டி வெளியீட்டு விழா, திருமண தகவல் மையத்தின் ஆண்டு விழா என முப்பெரும் விழா 28.12.2025 ஞாயிற்று கிழமை காலை 10 மணியள வில் வேலூர் ஆவனா இன் கூட்ட அரங் கில் நடைபெற்றது.விஸ்வகர்ம ஜெகத் குரு சிவராஜ ஞானாச்சாரிய குரு சுவா மிகள் தலைமை தாங்கி வெள்ளி விழா ஆண்டின் நிகழ்வினை தொடக்கி வைத்து பேசினார்.  விராட் விஸ்வகர்ம சேவாலயா அமைப்பின் இயக்குநர், சன் தொலைக் காட்சி யின் நல்ல காலம் பிறக்குது நிகழ் வின் ஜோதிடர் முனைவர் கே.பி. வித்யாதரன் ஆச்சாரியார்  சங்கத்தின் மாதாந்திர நாட்காட்டியினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். குருசுவாமிகள் மற்றும் ஜோதிட முனைவர் இருவரும் 25ஆம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றி வரும் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு கதராடை அணிவித்து பாராட்டினார் முன்னதாக நிறுவனர் மற்றும் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.  ஒருங்கிணைப்பாளர் ஞான. நடராஜன் விழா தொகுப்புரையாற்றினார் சங்கத்தின் தலைவர் சி.தேஜோமூர்த்தி, துணைத்தலைவர்கள்எல்.பன்னீர்செல்வம் எம்.ஞானசம்பந்தன் விஸ்வமலர் குழு தலைவர் எம்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். மத்திய அரசின் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற இயக்குநர் சித்த மருத்துவர் கே.மீனாட்சி சுந்தரம் சங்கத்தின் திருமண தகவல் மையத்தின் 24ஆம் ஆண்டு பதிவுகளை தொடக்கி வைத்து பேசினார்.
விஸ்வகர்ம ஜெகத்குரு சீனந்தல் மடாலயத்தின் குருபூஜை விழாக்குழு தலைவர் ஜி.விஸ்வநாதன், ஒருங்கி ணைந்த வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் சட்ட ஆலோசகர் வை.நடனசி காமணி, வட்டாட்சியர் பழனிவேல்ராஜன், உதவி பேராசிரியர் எஸ்.குமரகுரு, ஓய்வுபெற்ற கண்காணிப்பு பொறியார் ஏ.அருணாசலம், மின்வாரிய ஓய்வுபெற்ற உதவி செயற்பொறியாளர் இரா.லோக நாதன், விரிஞ்சிபுரம் விஸ்வகர்ம திருமண மண்டப அறக்கட்டளையின் தலைவர் எஸ்.என்.கணேச ஆச்சாரி, பொருளாளர் கோபால் ஆச்சாரி ஆகி யோர் வாழ்த்தி பேசினர். தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாநில துணைத்தலைவர் எம்.பிச்சாண்டி, வேலூர் மாவட்ட தலைவர் விசுவநாதன், வடக்கு மண்டல செயலாளர் ஜி.நந்த குமார் சங்கத்தின் நிர்வாகிகள் சு.சோமாஸ்கந்தன், எம்.செல்வராஜ், செயற்குழு உறுப்பினர்கள் கே.குப்பன், எம்.அன்பரசு, எம்.சீனிவாசன் ஜெ.ஜெய பிரகாஷ், தி.எஸ்.சக்ரீஸ்வரன், ஜி.கார்த்தி கேயன் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.  முடிவில் பொருளாளர் ஜெ.மணிஎழிலன் நன்றி கூறினார்.
 
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad