குடியாத்தத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் பஞ்சமி நிலம் மீட்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
குடியாத்தம் , டிச 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய குடியரசு கட்சி சார்பில் பஞ்சமி நிலம் மீட்பு போராட்டம் நடைபெற்றது போராட்டத் திற்கு மண்டல செயலாளர் இரா.சி தலித் குமார் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டதுணைத் தலைவர் மது வரவேற்பு உரையாற்றினார். ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் மாவட்ட இணைச் செயலாளர் சின்ன பிரகாஷ் வேலூர் மாநகரத் தலை வர் சக்திவேல் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் குசேலன் ராணிப்பேட்டை நகர தலைவர் இளங்கோவன் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் மாவட்ட செயலாளர் பூமியா அசோக் குமார் மாவட்ட மாணவரணி சரத்குமார் முன்னி லை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ராமஜெயம் மாநிலத் துணைத் தலைவர் தன்ராஜ் கொள்கை பரப்புச் செயலாளர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத் தில் ஆண்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கோட்டாட்சியர் சுபலட்சுமி இடம் மனு அளிக்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக