ஜிஎஸ்டி படுத்தும் பாடு: திருநெல்வேலி வருவாய்த்துறை அலுவலர்களின் முறைகேடால் அரசு ஒப்பந்ததாரர் டீக்கடை நடத்தும் அவலம்.
மத்திய அரசு நிதி ₹6.11 லட்சம் கையாடல், 3 ஆண்டுகளாக நீடித்த முறைகேடு: ஒப்பந்ததாரர் உண்ணாவிரதப் போராட்டம் - நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் உறுதி.
திருநெல்வேலி: மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (MGNREGS) கீழ், நெல்லை மாவட்டம், நாங்குநேரி ஒன்றியத்தில் ஒப்பந்தப் பணியை முடித்த அரசு ஒப்பந்தக்காரருக்குச் சேர வேண்டிய ₹6,11,834 பணத்தை அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) மற்றும் கிராம ஊராட்சிச் செயலர் ஆகியோர் சட்டவிரோதமாக வங்கி கணக்குக்கு மாற்றி கையாடல் செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பணம் கிடைக்காமல் அவதிப்பட்ட ஒப்பந்ததாரர் இன்று குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருந்த நிலையில், சத்தியம் தொலைக்காட்சியின் கள ஆய்வு மற்றும் கோரிக்கை எதிரொலியாக, உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்துப் பணத்தைப் பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
ஊழல் புகார்: ஒரு ஒப்பந்ததாரரின் துயரம்*
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி ஒன்றியம், வடக்கு விஜயநாராயணம் கிராமம், மேலப்பண்டாரபுரத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் *ஆ. முத்துக்குட்டி*. இவரது மகன் இந்திய இராணுவத்தில் பணிபுரியும் நிலையில், ஒப்பந்தக்காரராகப் பணி செய்து வருகிறார்.
பணிக் குறித்த விவரங்கள்:*
திட்டம்:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGS).
பணி:** 2019-2020 ஆம் நிதியாண்டில் கீழப்பண்டாரபுரம் கிராமத்தில் பேவர் பிளாக் கல் சாலை அமைக்கும் பணி.
திட்ட மதிப்பு:₹15,00,000/- (பதினைந்து லட்சம் ரூபாய்).முதல் பில் தொகை ₹6,11,834/-** (ஆறு லட்சத்து பதினோராயிரத்து எட்டு நூற்று முப்பத்து நான்கு ரூபாய்).
முத்துக்குட்டி அவர்கள் தெரிவித்ததாவது, "நான் வேலையை முடித்து முதல் பில்லை தாக்கல் செய்த நிலையில், எனக்கு வர வேண்டிய ₹6,11,834/- பணத்தை அப்போதைய நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலரும், முன்னாள் வடக்கு விஜயநாராயணம் ஊராட்சிச் செயலருமான பாலகிருஷ்ணன்
(தற்போது காவல்கிணறு செயலர்) ஆகியோர் கூட்டு சேர்ந்து, சட்டவிரோதமாகச் செயலரின் சொந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கையாடல் செய்துவிட்டனர் [பரிவர்த்தனை விவரங்கள் இணைப்பில் தெளிவாக உள்ளன]. இதன் காரணமாக, எனக்கு பணம் வராமலேயே, முழுத் திட்டத்திற்கும் நான் ஜிஎஸ்டி வரியாக ₹27,368 செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மூன்று வருடங்களாக நான் நீதி கேட்டுப் பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும், கையாடல் செய்தவர்கள் அரசு ஊழியர்கள் என்பதால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், நான் மன உளைச்சலில் டீ கடை நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன்," என்று கண்ணீருடன் கூறினார்.
அரசு நிர்வாகத்தின் அலைக்கழிப்பு மற்றும் நீதிமன்ற வழக்கு
நீதி கிடைக்காததால், முத்துக்குட்டி அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு (WP(MD) 14300/2024) தொடர்ந்துள்ளார்.
மாவட்ட நிர்வாகத்தின் பதில் 27.11.2025
முத்துக்குட்டியின் புகார் மனுவுக்கு (நாள்: 10.11.2025) மாவட்ட திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருநெல்வேலி அவர்கள் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், "இது மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்களுக்குள்ளே ஏற்பட்ட சொந்த நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினை என நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்தின் உதவிப் பொறியாளருடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பணம் வழங்கப்படவில்லை என்பதால், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. ஆகவே, நீதிமன்றத்தின் இறுதி முடிவுக்குப் பிறகு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை காரணம் காட்டி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தாமதித்த நிலையில், முத்துக்குட்டி தனது குடும்பத்துடன் இன்று (10.12.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவெடுத்தார்.
கேள்விக்குப் பிடிஓ யமுனா அளித்த பதில்
இந்த கையாடல் புகார் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) திருமதி. யமுனாவிடம் பேசியபோது, இது குறித்த விசாரணை திருநெல்வேலி பயிற்சி ஆட்சியர் (Trainee Collector) தவலேந்து தலைமையில் நடந்து வருவதாகவும், தற்போது இது குறித்து எதுவும் தெரிவிப்பதற்கு இல்லை என்றும் பதிலளித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) முத்துக்குட்டியை நேரில் அழைத்து, அவரது கோரிக்கை மனுவைப் பரிசீலித்தார். கையாடல் செய்யப்பட்ட ₹6.11 லட்சம் தொகையை மீட்டு, ஓரிரு நாட்களுக்குள் முத்துக்குட்டிக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது உரிய துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த உறுதியான வாக்குறுதியை ஏற்று, அரசு ஒப்பந்ததாரர் முத்துக்குட்டி தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக்கொண்டார். அதிகாரிகளின் ஊழல் கையாடலால் பாதிக்கப்பட்ட ஒரு ஒப்பந்ததாரருக்கு, போராட்டத்தின் மூலம் தற்காலிகத் தீர்வு கிடைத்திருப்பது, பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், கையாடலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள் மீது உரிய சட்ட மற்றும் துறைரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முக்கிய நிதி ஆதார ஆவணங்கள்:
திட்ட மதிப்பு | 15,00,000/- | பேவர் பிளாக் சாலை பணி |
| முதல் பில் தொகை (முத்துக்குட்டிக்குச் சேரவேண்டியது) | 6,11,834/- | BDO & செக்ரட்டரியால் கையாடல் செய்யப்பட்டது. |
| GST வரி செலுத்தியது | 27,368/- | பணம் வராமலேயே ஒப்பந்ததாரர் செலுத்தியது. |
செய்தியாளர் மாடசாமி திருநெல்வேலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக