ஜன.22- தூத்துக்குடியில் வருகிற ஜனவரி 25-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை இரட்டை ரெயில் பாதை திட்டதின் கீழ் பணிகள் நடைபெற உள்ளது.
தூத்துக்குடியில் ரெயில்வே பணிக்காக 1வது ரெயில்வே கேட் வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியில் இரட்டை ரெயில் பாதை திட்டதின் கீழ் பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற ஜனவரி 25-ம் தேதி இரவு 9 மணி முதல் ஜனவரி 28-ம் தேதி மாலை 6 மணி வரை 1வது ரெயில்வே கேட் தற்காலிகமாக மூடப்படும். எனவே வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்திற்கு மாற்று பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக