ஜன.29- திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிப்.1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம் நடைபெறுவதையொட்டி பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உற்சவரான சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 371 ஆண்டுகள் ஆகின்றன.
அதை கொண்டாடும் வகையில் சண்முகர் ஆண்டு விழா சனிக்கிழமை (ஜன. 31) நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு மேல் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோயில் சேர்ந்து தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) தைப்பூச திருவிழாவையொட்டி, அதிகாலை 4 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரி ஆகியவை நடைபெறும்.
10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி தனித் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சேர்கிறார். தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன எனக் கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக