குடியாத்தம் காக்க தோப்பில் அமைந்து ள்ள அத்தி கல்விக் குழுமத்தின் சார்பில் 77 வது குடியரசு தினம் கொண்டாடப் பட்டது !
குடியாத்தம் ஜன 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த
அத்தி மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ. சொந்தராஜன் அவர்கள் தலைமை தாங்கி மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி நாட்டிற்கு பெருமை சேர்க்கவேண்டும் என கேட்டுக் கொண் டார் . அத்தி கல்விக் குழுமத்தின் அறங் காவலர் டாக்டர் சகாநாதன் சொந்தர ராஜன் அவர்கள் கொடியை ஏற்றி வைத்து மாணவர்கள் ஆகிய நீங்கள் மொழிகளை தேர்ந்தெடுத்து அறிவை வளர்த்து கொண்டு தாங்களாகவே சிந்திக்க கற்றுக்கொண்டு வாழ்வில் முன்னேறவேண்டும் என கேட்டுக் கொண்டார் . மேலும் மருத்துவர்கள்
திவ்யா சுகநாதன் அவர்கள் அரசிலமைப் பின் முக்கியத்துவத்தையும் அதை கடைப் பிடித்தலையும் மாணவர்களுக்கு தெளிவு படுத்தினார் . மேலும் அத்தி மருத்துவ மனையின் கிளை தலைமை மருத்துவர் ஆ கென்னடி அவர்கள், குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் k . குமரவேல் , அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி , அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனித்துரை மற்றும் மருத்துவ நிர்வாக அலுவலர் சரணவன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். அத்தி கல்லூரியின் மாணவர்கள் சிறப்பு யோகா சனம் செய்து காட்டியும் , குடியரசு தின சிறப்பு பேச்சு ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தினர். அரசு பொது தேர்வில் முதலிடம் பிடித்த bnys மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டது . இதில் மருத்துவர்கள் , செவிலியர்கள் , பேராசிரியர்கள் , விரிவுரையாளர்கள் அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு குடியரசு தினத்தை சிறப்பாக கொண்டாடினார்கள் .
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக