பொள்ளாச்சியில் நேற்று (17.1.26)மாபெரும் திராவிட பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது அதில் ,இரா. நவநீத கிருஷ்ணன் EX MC வடக்கு நகர பொறுப்பாளர், மற்றும் முனைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் நகர மன்ற தலைவர், அவர்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் சிறப்பு விருந்தினர்களாக,திரு தளபதி, முருகேசன் அவர்கள். ,கே ஈஸ்வர சாமி, மற்றும் முக்கிய பிரதிநிதிகள், கழக அமைப்பாளர்கள் ,தொண்டர்கள், உறுப்பினர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டியும், மற்றும் கோலப்போட்டி, மற்றும் விளையாட்டுப் போட்டிகள், 100 மகளிர் ஒன்றாக இணைந்து வைத்த சமத்துவ பொங்கல் மற்றும் இதில் விளையாடி வெற்றி பெற்றவர்களுக்கு கேஸ் பிரைஸ், பரிசுப் பொருட்கள் கொடுக்கப்பட்டது. இசைநிகழ்ச்சியும்,முழுவதும் இனிப்புடன் உணவும் வழங்கப்பட்டது. இதில் ஆடு, மாடு, கோழி ,குதிரை, என்று மிகவும் சிறப்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக