மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியது சம்பந்தமாக செய்தியாளர்களை சந்திப்பு!
பேரணாம்பட்டு , ஜன 10 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியது சம்பந்தமாக செய்தியாளர் களை சந்திப்பு காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (MGNREGA ) பெயரை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விக்சித் பாரத் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (VB GRAM G) என்று பெயர் மாற்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிஅறிவித் துள்ள போராட்டங்களை வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் என்று சார்பில் முன்னெடுத்து பொதுமக்களுக்கு எடுத்து ரைக்கும் வகையில் இன்று சனிக்கிழமை வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் கு.சுரேஷ் குமார் அவர்கள் பத்திரிக்கை யாளர்கள் சந்திப்பை நடத்தினார்
அதில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர், மாவட்ட துணைத் தலைவர் திருமதி தேவகிராணி ராஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் இர்ஷாத் அஹமத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக