ஏரல் சேர்மன் அருணாசல ஸ்வாமி கோவில் தை அமாவாசை திருவிழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 7 ஜனவரி, 2026

ஏரல் சேர்மன் அருணாசல ஸ்வாமி கோவில் தை அமாவாசை திருவிழா.

ஏரல் சேர்மன் அருணாசல ஸ்வாமி கோவில் தை அமாவாசை திருவிழா.

ஏரல் சேர்மன் அருணாசல சாமி கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்த பெற்ற கோவிலாகும். 

இந்தக் கோவிலில் தை அமாவாசை திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கோவில் வளாகத் தில் கொடியேற்ற நிகழ்ச்சியு டன் தொடங்குகிறது. 

விழா நாட்களில் தினமும் காலை, இரவில் சாமி விசேஷ அலங் காரங்களுடன் சப்பரத்தில் கோவில் வளாகத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பா லிப்பார்.

விழாவின் சிகர நிகழ்ச்சி வருகிற 18-ந் தேதி நடக்கிறது. அன்று பகல் 1.30 மணிக்கு சாமி உருகு பலகை தரிசனம் அபிஷேகம், மாலை 6மணிக்கு விலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோலக் காட்சி, இரவு 10 மணிக்கு சுற்பக பொன் சப்ரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. 

மறுநாள் காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி நடக்கிறது. இரவு 10 மணிக்கு சாமி மூலஸ் கரவுயம் தானம் சேரும் ஆனந்தகாட்சி பெறும்.

வருகிற 20-ந் தேதி காலை தாமிரபரணி ஆறில் சகல நோய் தீர்க்க திருத்துறையில் நீராடல், பகல் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு ஆலிலைச் சயனம் மங்கள தரிசனம் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad