அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராமம் காக்கங்கரை அடுத்த நாராயண புரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 ஜனவரி, 2026

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராமம் காக்கங்கரை அடுத்த நாராயண புரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் !

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராமம்  காக்கங்கரை அடுத்த நாராயண புரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் !
கந்தலி , ஜன 8 -

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றி யம், காக்கங்கரை அடுத்த நாராயணபுரம் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனக் குற்றம் சாட்டி, அப்பகுதி பொதுமக்கள் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாராயணபுரம் கிராமத்தில் நீண்ட காலமாக சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்குகள், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதுவும் முறையாக ஏற்படுத் தப்படவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். குறிப் பாக, மழைக்காலங்களில் சேறும் சகதி யுமாக மாறும் சாலைகளால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கடும் அவதிப்பட்டு வருவதாகவும் கூறினர். மேலும், கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை சரிவர வழங்கப்படவில்லை என்றும், வேலை கேட்டாலும் வேலை வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். 
இதனால் குடும்பங்களை நடத்த முடியா மல் பெரும் பொருளாதார சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர் .
இந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண் கள், ஆண்கள் ஒன்று திரண்டு, திருப்பத் தூர் – போச்சம்பள்ளி செல்லும் முக்கிய சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் வரை போராட்டம் தொடரும்” என பொதுமக்கள் உறுதியுடன் தெரிவித் தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர்  அதிகாரி கள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட் டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.அதிகாரிகள் உரியநடவடிக் கை எடுத்து, தங்கள் நீண்ட நாள் கோரிக் கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே நாராயணபுரம் மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

மாவட்ட செய்தியாளர்.
மோ.அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad