ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் கருடசேவை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 29 ஜனவரி, 2026

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் கருடசேவை.

ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் கருடசேவை.

ஸ்ரீவைகுண்டம் ஜன 29. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் முதலாவதான ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் கடந்த 24 ந்தேதி நடந்தது. 

நேற்று ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம் 7.15 மணிக்கு மூலவர் திருமணம். 7.45 மணிக்கு நித்தியல். 9 மணிக்கு ஸ்வாமி கள்ளப்பிரான் கொடிமரம் சுற்றி தங்க மசகிரி மண்டபத்தில் எழுந்தருளினார். 

9.45 மணிக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. 10.15 மணிக்கு தீபாராதனை .10.45 மணிக்கு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சீனிவாசன். ராமானுஜம். கண்ணன் ஆகியோர் சேவித்தனர். 

பின்னர் தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை. உற்சவர் ஸ்வாமி கள்ளப்பிரான் வாகன மண்டபம் எழுந்தருளினார். 

அங்கு கருட வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டது. 8.45 மணிக்கு மாடவீதி தை வீதி சுற்றி வீதி உலா நடந்தது ‌பிப்ரவரி 2 . 3 தெப்பம் நடைபெறுகிறது. 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரமேஷ். வாசு நாராயணன். ராமானுஜன். சீனு. ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன் தேவராஜன் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் 

ஆய்வாளர் நிஷாந்தினி அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் பேக்கிரி முருகன் முத்துகிருஷ்ணன் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad