நாகர்கோவில் - அந்தியோதயா ரெயில் மீது மர்மநபர்கள் கல் வீச்சு, கண்ணாடி உடைந்து பெண் பயணி காயம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 3 ஜனவரி, 2026

நாகர்கோவில் - அந்தியோதயா ரெயில் மீது மர்மநபர்கள் கல் வீச்சு, கண்ணாடி உடைந்து பெண் பயணி காயம்.



நாகர்கோவில் - அந்தியோதயா ரெயில் மீது மர்மநபர்கள் கல் வீச்சு, கண்ணாடி உடைந்து பெண் பயணி காயம்.

அந்தியோதயா ரெயில், நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக தாம்பரத்துக்கு தினமும் அந்தியோதயா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கம்போல் நேற்று மாலை 3.50 மணி அளவில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. இதில் ஏராள மான பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த ரெயிலில் 5-வது பெட்டியில் கன்னியாகுமரி கல்குளம் பகுதியை சேர்ந்த டேவிட், அவருடைய மனைவி ரீனா அன்னமேரி (வயது 67) ஆகியோர் சென்னைக்கு பயணம் செய்தனர்.

கல்வீச்சு

ஆரல்வாய்மொழி அருகே ரெயில் வந்து கொண்டிருந்தபோது மர்மநபர்கள் திடீரென்று ரெயில் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் ஒரு கல், 5-வது பெட்டி பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி மீது விழுந்தது. அந்த கண்ணாடியில் ஓட்டை விழுந்து கண்ணாடி துகள்கள் சிதறின.

ஜன்னல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ரீனா அன்னமேரி மீது கண்ணாடி துண்டுகள் விழுந்தன. இதில் அவருக்கு தலை மற்றும் முகம் பகுதியில் காயம் ஏற்பட்டது.

நெல்லையில் சிகிச்சை

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை யடுத்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில் நிலையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி மருத் துவ மையத்தின் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

மாலை 5 மணி அளவில் நெல்லை சந்திப்பில் 3-வது பிளாட்பாரத்துக்கு ரெயில் வந்த தும் ரீனா அன்னமேரிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை ஆஸ் பத்திரியில் சேர்க்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் சென்னைக்கு முக்கிய நிகழ்ச் சிக்கு செல்ல இருப்பதால் அங்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறி பய ணத்தை தொடர்வதாக தெரிவித்தார். இதையடுத்து நெல்லை சந்திப்பில் இருந்து அந்தி யோதயா ரெயில் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து புகார் பெற்று நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தெரிவிக் கப்பட்டது. நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரல்வாய்மொழி பகுதிக்கு சென்று ரெயில் மீது கற்களை வீசிய கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு ரெயில் மீது கற்களை வீசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தினார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad