குடியாத்தம் அருகே கிராமப் பகுதியில் யானைகள் கூட்டம் பொதுமக்கள் அச்சத் தில்!
குடியாத்தம் ,ஜன 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் விழுதோணி பாளையம் மதுரா அருந்ததி யர் காலனி குடியிருப்பு பகுதிக்குள் இன்று அதிகாலை 3.00 மணி அளவில் ஆந்திரா வனப்பகுதியில் இருந்து நான்கு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்துள்ளது. மேற்படி யானைகள் தற்போது புல எண் 317 -மலை புறம் போக்கில் சுற்றி திரிகின்றது. மேற்படி சம்பவம் அறிந்த வனத்துறையினர் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் துரத்தி விடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக