அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு தேவையான அத்தி யாவசிய பொருட்கள் வழங்கும்
குடியாத்தம் ,பிப் 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அன்பு பாலம் என்ற அமைப்பின் மூலம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணி மற்றும் கடும் குளிர் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை காப்பாற்றும் வகையில் குழந்தைகளுக் கான கம்பளிகள் மற்றும் தலைக்கு கம்பளியால் ஆன குல்லா தாய்மார்களு க்கு தேவையான தலை உறை மற்றும் டவல் ஆகியவை அன்பு பாலம் மூலம் வழங்கப்பட்டது வேலூர் மாவட்ட தலை மை மருத்துவமனையான குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச் சியில் தலைமை மருத்துவ அலுவலர் மஞ்சுநாதன் பங்கேற்றார் நகர மன்ற உறுப்பினர் அரசு மற்றும் ஆசிர்வாத் இன்டர்நேஷனல் பள்ளி சேர்மன் மற்றும் தாளாளர் மஞ்சுநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட னர் அரசு மருத்துவமனையில் நடந் த நிகழ்ச்சியில் சுமார் 30 மேற்பட்ட தாய் மார்கள் தங்கள் குழந்தைகளோடு வருகை தந்து ஆடைகள் மற்றும் தலை உறை மற்றும் தவல்களை பெற்றுச் சென்றனர் குடியாத்தம் அன்பு பாலம் வழங்கிய ஆடைகளை பெற்றுக் கொண்ட தாய்மார்கள் அன்பு பாலம் அமைப்புக்கு தங்களின் நன்றிகளை தெரிவித்தனர்
நிகழ்ச்சி ஏற்பாட்டை கார்த்திகேயன் செய்திருந்த நிலையில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக