பிப். 25- தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் வீட்டு பின்னால் உள்ள தடுப்பு சுவர் அருகில் பூவரசு மரம் மேலே கண்ணாடி விரியன் பாம்பு இருந்தது. அதனை பார்த்த அந்த பகுதி மக்கள் தெர்மல் நகர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து தெர்மல்நகர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சிவா தலைமையிலான தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்ணாடி விரியன் எனப்படும் விஷ பாம்பை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக