பிப்.25- தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆதிபராசக்தி நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழாய்க்குள் பொறுத்தப்பட்ட மோட்டாரை புகைப்படம் எடுக்க முயன்ற தூய்மை பணியாளர்கள் மீது விஷவாயு தாக்கியதில் ஒருவர் பலி, மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பருத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்ற தூய்மை பணியாளர் பரிதாபமாக பலி, சங்கர் என்ற மற்றொரு பணியாளர் மயங்கிய நிலையில் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக