கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் பேருந்துகளாக காத்திருக்கும் பெண்களை அவதூறுக பேசி, நகைகளை பறிக்கும் நோக்கில் கட்டைக்கம்புகளால் அச்சுறுத்தி வரும் நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் அந்த நபரை பேருந்து நிலையத்தில் இருந்து வெளியேற்ற முயற்சி மேற்கொண்ட மாநகராட்சி காவலர்களை, அந்த நபர் அடித்து, கடித்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொலைவெறி தாக்குதல் நடத்தியதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து அங்கு நின்ற போலீசாரிடம் ஒப்படைப்பு. இதுபோன்ற நபர்களை பேருந்து நிலையத்துக்குள் நுழைய அனுமதிக்க கூடாது. பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக