மிகப் பிரசித்தி பெற்ற திருப்பூர் பெருமாநல்லூர் அருள்மிகு கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் பூவோடு எடுக்கும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பூவோடு எடுத்து கொண்டத்து காளியம்மன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வார்கள் இந்த நிகழ்வில் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி அபிநயா அவர்கள் பூவோடு எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பூவோடு எடுத்தார் முன்னதாக திருப்பூர் வடக்கு தேர்தல் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு பிறகு பூவோடு எடுக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிகழ்வில் உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக