உழவர் சந்தை பகுதியில் திமுக கூட்டணி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு ஆதரவாக மாநில பொதுசெயலாளர் ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!
வாணியம்பாடி, ஏப்ரல்.14-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.எ.எம்.முஹம்மத் அபூபக்கர், நகர திமுக செயலாளர் வி.எஸ்.சாரதி குமார் ஆகியோர் தலைமையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உழவர் சந்தை பகுதியில் விவசாயி மற்றும் பொதுமக்களிடம் ஏணி சின்னத் திற்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர். இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகி கள், தொண்டர்கள் என பலர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக