மதசார்பற்ற முற்பட்ட அணியின் வேட்பாளராக மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான இரா. ஜெயராமகிருஷ்ணன் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் நேரடியாக அவர்கள் இல்லங்களில் சென்று காலில் விழுந்து ஆசி வாங்கி தனக்கு ஆதரவு அளிக்குமாறும் தனது சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய பணிவுடன் கேட்டு கொண்டார் பொதுவாக ஜெயராமகிருஷ்ணன் அவர்கள் பொதுமக்களிடம் மிகவும் அன்பாக பழக கூடியவர் எம்எல்ஏவாக இருந்தாலும் எம்எல்ஏவாக இல்லாமல் போனாலும் ஒரே மாதிரியான செயலை கடைபிடிக்கும் அவரது குணம் அனைவருக்கும் பிடித்ததாகும் இந்த முறை அவர் வெற்றி வாய்ப்பை பெறுவார் என்று அவர்களுடைய நண்பர்கள் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூறினர்
மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக