பேரணாம்பட்டு அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது! அவரிடமிருந்து சுமார் 400 கிராம் கஞ்சா பறிமுதல் !
பேரணாம்பட்டு ,ஜூன் 2 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே. கஞ்சா விற்ற 2. வாலிபர்களை போலீசார் கைது செய்து சுமார் 400 கிராம்கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பேரணாம்பட்டு அடுத்த அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி பின்புறம் உள்ள சுடுகாட்டில்.2. வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் பிரபு அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து. காவல் ஆய்வாளர் பிரபு உதவி ஆய்வா ளர் ராஜுயூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பின்னர் அவர்களிடம் சோதனை செய்ததில் 50 கிராம் வீதம் 8 பொட்டலங்களாகசுமார் 400 கிராம் கஞ்சா மற்றும் எலக்ட்ரானிக் எடை வைத்திருப்பது தெரியவந்தது. போலீசார் அவைகளை பறிமுதல் செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் ஏரி குத்தி மேடு . அபி நகர் பகுதியை சேர்ந்த துபேல் (வயது 30) வேற நபர் தோப்புத் தெருவை சேர்ந்த பாபு (வயது 49) ஆகிய இருவரும் சேர்ந்து ஆந்திர . மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து whatsapp குழு ஆரம்பித்து. அதன் மூலம் விற்பனை செய்து வருகிறார்கள். என்று தெரிய வந்தது இதை எடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் உதவி ஆய்வாளர் ராஜயூ. கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைகள் அடைத்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக