வேலூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில் காட்பாடி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகம் சீரமைப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 24 ஜூன், 2026

வேலூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில் காட்பாடி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகம் சீரமைப்பு!

வேலூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில் காட்பாடி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகம் சீரமைப்பு!
வேலூர் , ஜுன் 24 -
வேலூர் மாவட்டம் ரோட்டரி டிஸ்ட்ரிக் 3231 மூலம் ரோட்டரி வேலூர் ஏஞ்சல்ஸ் சங்கத் தின் சார்பாக, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவு நீர் வடி கால் வசதி, கழிப்பறை சீரமைப்பு மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப் பட்டது. இதன் நிறைவு விழா  பிற்பகல் 11:30 மணிக்கு நடைபெற்றது. விழாவில் மாவட்ட ஆளுநர் சுரேஷ் தலைமையில், காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் சுதாகர் சிறப்பு விருந்தினராகவும் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை சரளாவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் ரோட்டரி டிஸ்ட்ரிக் செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்ட னர். வேலூர் ரோட்டரி லிட்டரசி சேர்மன் அருளரசி மகிழ்வான பள்ளி பற்றிய விளக்க உரையினை வழங்கினார். விழா வில் இறுதியாக பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டது இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த வேலூர் ஏஞ்சல்ஸ் சங்கத்தின் தலைவர்  விஜயபாரதி அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட ஆளுநர் மற்றும் சிறப்பு விருந்தி னர் ஏற்புரை வழங்கினர். தலைமை ஆசிரியை நன்றி தெரிவித்து பேசினார். இறுதியாக. இப்பள்ளி மகிழ்வான பள்ளியாக அறிவிக்கப்பட்டது. (ஹேப்பி ஸ்கூல்)  ஏஞ்சல்ஸ் சங்கத்தின் செயலா ளர் கவிதா நன்றி உரை வழங்கினார். 
இந்நிகழ்ச்சியில் ஏஞ்சல்ஸ் சங்கத்தின் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad