கைத்தறி நெசவாளர்களுக்கு குறைத்த கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி !
நெசவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி எம்ஜிஆர் நகர் பகுதியில்
குடியாத்தம் ,ஜூலை 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கைத்தறி நெசவாளர்கள் ஆலோசனை கூட்டம்
இக்கூட்டத்திற்கு சங்கத் தலைவர் ஆர் அண்ணாமலை தலைமை வகித்தார்
எம்ஜிஆர் நகர் பகுதி கந்தசாமி நகர் பகுதி ராஜீவ் காந்தி நகர் பகுதி நெசவா ளர்கள் கலந்து கொண்டனர் கீழ்க்கண்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது கைத்தறி நெசவாளர்களுக்கு குறைக்கப்பட்ட கூலியை உடனே உயர் த்தி வழங்க வேண்டும் என்றும் அதற்காக முத்தரப்பு பேச்சு வார்த்தையை உடனே நடத்த துறை சார்ந்த அரசு அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரி க்கையை வலியுறுத்துவது என்றும் கைத் தறி நெசவாளர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் திருநாளுக்கு பத்து சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எம்ஜிஆர் நகரில் இருந்து கைத்தறி நெசவாளர்கள் ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அவர் களிடம் மனு அளிப்பது என்று ஒருமன தாக தீர்மானிக்கப்பட்டது அனைத்து பகுதி நெசவாளர்களும் இந்த ஊர்வலத் தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கூட்டத் தில் மணி மூர்த்தி தணிகைவேல் மோகன் உள்ளிட்ட நெசவாளர்கள்உள்ளிட்ட நெசவாளர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக