80 ஆவது சுதந்திர தின விழா விஷாரம் வெல்ஃபேர் எஜுகேஷனல் ஆண்டு சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் பல்வேறு நல திட்டங்கள் !
ராணிப்பேட்டை மாவட்டம் விஷாரம் வெல்ஃபர் எஜூகேஷனல் & சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் 80வது சுதந்திர தினவிழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது அசோசியேஷன் தலைவர் ஏ. நிஹால் அஹ்மத் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லபாபின் ஜமாஅத் முதவல்லி ஜனாப் பாக்தினி இர்பான் அஹ்மத் சாஹிப் அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள். கெளரவ விருந்தினராக மேல்விஷாரம் அஹ்லே சுன்னத் லபாபின் ஜமாஅத் முதவல்லி ஜனாப் சௌகார் இர்ஷாத் அஹ்மத் சாஹிப் அவர்களும் மேல் விஷாரம் அஹ்லே சுன்னத் லபாபின் ஜமாஅத் முதவல்லி ஜனாப் கிராமணி அஹ்மத் ஜமால் சாஹிப் அவர்களும் மேல்விஷாரம் மின்வாரிய துறை இள நிலை பொறியாளர் ஜனாப் கே.சாதிக் பாஷா சாஹிப் அவர்களும் கலந்து கொண்டனர். அப்போது துணைத் தலை வர் பி.முஹம்மத் யஹியா , செயலாளர் எஸ்.ஏ. சைஃபுதீன், இணைச் செயலாளர் கே.ஓ. ஃபத்ஹதுலையன் ஆகியோர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக