நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னி ட்டு சிறப்பு தொழுகை பொது மக்களுக்கு அன்னதானம் வழங்குதல் நகராட்சி தலைவர் பங்கேற்ப்பு !
குடியாத்தம், ஆகஸ்ட் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பஜார் பகுதியில் உள்ள சவுக் பள்ளி வாசலில் மீலாது நபி முன்னிட்டு சிறப்பு சொற் பொழிவு நடைபெற்றது இதில் பள்ளி வாசலின் இமாம் ஹஜரத் ரஷீத் சாஹெப் கலந்து கொண்டு நபிகள் நாயகம் அவரின் வாழ்க்கை வரலாறு நெறிமுறை கடைபிடித்தல் உள்ளிட்டவை குறித்து சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது
இதனைத் தொடர்ந்து உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி வாழ வும் மழை வேண்டியும் சிறப்பு துவா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பள ராக நகராட்சி தலைவர் சௌந்தராஜன் கலந்து கொண்டு நபிகள் நாயகம் அவரின் தியாகத்தை உணர்த்தும் வகை யில் சிறப்புரை ஆற்றினார் பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங் கினார் மேலும் ஏழை எளியோர்களுக்கு பிரியாணி வழங்கினார் இதில் நகராட்சி உறுப்பினர்கள் ஜாவித்,கபீர், மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜபார்,இளை ஞரணியினர் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக